Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Nov 11, 2011

பெண்ணும் புத்தகமும்



பேருந்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்குண்டு 
தமிழ் பிடித்ததால் படிக்கிறேனா படித்ததால் தமிழ் பிடித்ததா தெரியவில்லை
பெண்களைப் பிடிக்கும் வயதில் புத்தகம் பிடித்ததும் படித்ததும் 
முரணான பழக்கங்கள் இல்லையென்பது படித்தவர்கள் வாக்கு.
(புத்தகத்தையும் பெண்ணையும் ஒருசேர )

பெண் பிடித்த பருவங்களில் நான் சந்தோசமாக சஞ்சரித்தாலும் 
பெண்களால் படிக்க முடியவனாகவே இருப்பது ஒரு சங்கடம் தான்
புத்தகம் படிப்பது பெண் பற்றிய நிறைய புரிதல் ஏற்படுத்தினாலும் 
அது என் பெண்ணின் ரசனையையும் அதிகப்படுத்திருக்கிறது 
கதைளில் காதல்களை தேடி வாசித்ததுண்டு இது வரை கிடைக்காதது 
யோசிக்கும் பொழுது மூடி யாசித்ததுமுண்டு 

இன்றும் புத்தகம் திறந்தேன் பேருந்தில் 
எதிரில் படிக்கக் காத்திருந்த பெண் ஒருத்தி 
எதை தொடங்க வண்ணதாசனின் கவிதைகளையா,
கருப்பு வெள்ளையில்  தெரியும் வனவில்லையா
இரண்டுமே என்னுள் எழும் உணர்சிகள் தான் எனினும் 
புத்தகத்தை எழிதாக முடிவிட முடிகிறது.
என் அகத்தினுள் பெண் இல்லாததுதான் போலும்.

தீட்டப்பட்ட புருவங்கள் வானமாய் இமைகள் சிறகடிக்க 
பறக்கும் விழிகளின் ஈரத்தின் சாரலில் நனையத்தொடங்கிய
சில நிமிடங்களில் அவளின் இறக்கம் வந்தது அனால் 
சற்றும் இரக்கம் வரவில்லை என் மிது
உறக்கம் பெரிதென்று மற்றவர்கள் கிடக்க
கிறக்கம் கொண்ட என்னைக் கண்டு கொள்ளத் தெரியவில்லை 

அந்த இறக்கத்தில் இறங்கியது அவள் ஒருத்தி இல்லை
என் இதயமும் இறங்கியதை எனக்கே இப்பொழுதுதான் தெரியவந்தது 
என்னை விட்டு பராரியை பாவைபின் சுற்றும் எனக்கவலை எனக்கில்லை 
பராரியின் சந்தோசம் கூட இல்லாமல் எனக்கு வாய்க்கவில்லை
இடப்பக்கம் இதயம் இல்லாத போதும் அதற்கு மேல் பயச்சீட்டும் சில்லறையுடன் நான்.......

May 24, 2011

அவள்! அவள்!! அவள்!!!



உன் மேகம் 
வானின் மேகங்களின் உருவ மாற்றம் பெரிய விசயமில்லை 
உன் நேற்றிச்சுருக்கங்களின் மாற்றமோ உன் 
 கண்களின் கதிர்களை

சந்திரனிலிருந்து சூரியனுக்கும் சூரியனிலிருந்து சந்திரனுக்கும் மாற்றிவிடுகிறது.

காதல் ஒரு மின்னல்
கச்சிதமாய் வரும் சந்திரனுமில்லை 
நிச்சியமாய் வரும் சூரியனுமில்லை 
உச்சியில் வரும் ஒற்றுமை அவ்வளவே!!

பேச்சு
சில ஆண்களுக்கு மட்டுமே சுற்றிலும் பெண்கள் பேச்சு
மற்றவர்களுக்கோ  பெண்களைச் சுற்றியே மட்டுமே பேச்சு


வண்ணத்துப்பூச்சியா - மலரா
வண்ணத்துப்பூச்சிகளுக்கோ நீ அவை வந்தமர முடியாத மலர்!
மலர்களுகோ நீ அவை மிது வந்தமாரத வண்ணத்துப்பூச்சி!
நீ மலரா, வண்ணத்துப்பூச்சியா!
சில நேரங்களில் நான் உன்னைத்தேடி..
சில நேரங்களில் நீ என்னைத்தேடி..


படைப்பாளி 
பிரம்மனின் படைப்புகளில் மதிப்பிருந்ததில்லை எனக்கு 
பழுதுகள் பல நான் உட்பட..
அவன் வெளியிட்ட 5' 2 கவிதைத் தொகுப்பான உன்னைக் கண்டேன் 
உன் பாதம் போதும் அவன் பதம் சொல்ல 
இனி அவன் படைப்பில் 
பழுதுகள் எனக்கும் இல்லை எவர்க்கும் இல்லை.


அழகு 
அழகென்பது காட்சிகளில் இல்லை காண்பவனின் பார்வையில் தான்
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
கண்டவனின் பார்வையை அழகாக்கிய காட்சி நீ.


அழகென்பது இருப்பதில் இல்லை தெரிவதில் தான் 
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
தெரிவதே இவ்வளவென்றால் இருப்பதில் ஆர்வம்  கொண்டேன்.

Jan 26, 2011

காதல் பருவம் - இரண்டு

காதல் பிரபஞ்சம்

காதலெனும் பால்வெளியில்
காமமெனும் சூரியகுடும்பத்தில்
நம் மெத்தையெனும் பூமியில்
நீ கிடந்திருப்பாய் நிலப்பரப்பைப் போல
நான் உன் மேல் மிதந்தேன் மேகத்தைப் போல
உன் கூந்தலெனும் காட்டுபகுதியாக
அதை வளைக்கும் என் கைகள் காற்றாக
என் உயிர் பொழியக்காத்திருக்கும் மழையாக
உன் அங்கமெல்லாம் அசைந்து கொடுக்கும் மரமாக
நம் உள்ளமெல்லாம் துள்ளும் மழைக்காக ஆடும் மயிலென
சிந்திய முத்தங்கள் மின்னலாக
அது எழுப்பிய சத்தம் இடியாக
நம் இருவரின் வியர்வை சாரலாக
என் உயிர் பாயிந்து உன்னில் மலரும் சிறு புல்லென
இவையனைத்தும் பார்த்த என் அறைவிளக்கு நிலவென
நானும் மெத்தையில் விழுந்துவிட்டேன் கடலோடு கலந்துவிட்டேன்

****************************************************************
அமாவாசை

கதிரொளியை பரதிபலிக்க முடியாத நிலவின் ஒளியின்றி நிர்மூலமாய் நிற்கும் வானம் அது போல நீ வராத நாளன்று தன் களையை இழந்திருக்கும் நம் அலுவலகமும்

நிலவைப் பார்த்துப் பார்த்து சோறுண்ணப்பழகிய குழந்தையோ அன்று அது வராதேனத் தெரியாமல்

நிமிடத்திற்கொருமுறை வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நானோ

நீ விடுப்பெனத் தெரிந்தும் உன் இருப்பிடத்தை நிமிடத்திற்கொருமுறை பார்த்துக்கொண்டிருப்பேன்

நிலவைப் பார்க்காமல் உண்ணாமல் கண்ணீருடன் அப்பிள்ளை உறங்கிய பின்

நிலவைக் காட்ட முடியாத சோகத்தில் அப்பிள்ளையின் தாய் கண்ணீர் சிந்துவாள்

உன்னைக் காணமல் கண்ணீர் சிந்திய என் கண்களுக்கு தைரியம் சொன்ன என் இதயம் அழத்தொடங்கியது அப்பிள்ளையின் தாய் போல


விழித்ததும் இதயம் சொன்னது இன்று நீ வருவாயென!!



Dec 25, 2010

கண்ணாடிப் பருவம் - ஒன்று

மிசை முளைத்ததும் கண்களின் வேலை இரண்டு
ஒன்று - கண்ணாடியில் தன்னை அழகாக்கிப் பார்க்க
இரண்டு - பார்த்த முகத்தை பெண் முன்னின்று காட்ட

முடாத வாய்மூடி பேசாத விழிகள் பேசத் தொடங்கும்
கண்போன பாதையில் சென்ற கால்கள் இப்போது
பெண்போன பாதையில் செல்ல ஆரம்பிகிறது

கதாநாயகனின் சண்டை காட்சிகளை மட்டும் பார்த்து ரசித்தவர்கள்
அவன் காதல் செய்வதையும் கவனித்து ரசிக்க ஆரம்பிக்கிறார்கள்
அவனின் காதலியை இவர்களும் காதலிக்கிறார்கள்

கனவிலும் செரி நினைவிலும் செரி பெண்களே நிறைகிறார்கள்
கண்ணெதிரே பார்த்த பெண்ணிடமோ கனவில் பேசுகிறார்கள்
கனவில் கண்ட பெண்ணையோ கடைத்தெருவில் தேடுகிறார்கள்

நிலவைப் பார்த்து சோறுண்டவர்கள் பின் நிலாவை
தேடித்தேடி பிடித்து ஒட்டுத்தால்வாரத்தில் அடைத்தவர்கள்
நிலாவுடனும் படுகிறார்கள் நிலவையும் பற்றியும் படுகிறார்கள்

காமத்தீயால் இளமை இதயத்தை எரிக்க எழுந்த வெப்பத்தை
காதலில் இளைப்பாற்ற காதலியைத் தேடியலைகிறார்கள்
சிலருக்குத்தான் தேடிய காதலி கிடைக்கிறார்கள்
தேடிக்கிடைக்காதவர்கள் கிடைத்தை காதலிக்கிறார்கள்

தேடல் என்றும் தொடரும்!!!

காதல் பருவம் - ஒன்று


உண்மை எது?
ஈர்க்கும் உன் புன்னகை போதும் கண்ணே!!, பொன்நகை விலையதிகமானத்தால் சொல்லவில்லை..
புன்னகைக்கும் ஓவியம் கண்டதுண்டு!! ஒரு ஓவியம் புன்னகைப்பதைப் பார்க்கத்தான் அன்பே..

மல்லிகைச்சரம் வேண்டாம் உன் குந்தலுக்கு!! காசு கையில் இல்லாமல் சொல்லவில்லை..
மல்லிகையினால் உன் குந்தல் மணக்கவில்லை கானகாம்பரத்தில் கூட மல்லிகை வாசம் உன் குந்தலால்..

ஊனம்

என் எண்ணங்களை உன்னிடம் கூறமுடியாத பொழுது உமையானேன்.. என் காதுகளில் உன்னுடைய வார்த்தைகள் விழாதபொழுது செவிடானேன்.. உன் பாதையில் நான் நடக்க முடியாத நாட்களெல்லாம் நான் முடவன்..
உன் வசமில்லாத காற்றை நுகர்க்கும் தருணங்களில் பிணமானேன்..

மேற்ச்சொன்ன எந்த ஊனத்தையும் நான் பொறுத்துக்கொள்கிறேன்..
உன்னை நான் என் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தால்..
ஆகையால் குருடனாக மட்டும் இருக்க முடியாது கண்ணே..
இந்தப்பேரழகியை எனக்குக்காட்டிய என் கண்களுக்கு தண்டனை தர முடியாது.

சமாதிகள்

ஒரு பொய்யிலாவது நான் உன் காதலனாக வேண்டுமென்று ஆசைப்படவில்லை
மெய்யை உரைத்து விடு என்னை உன் காதலனாக ஏற்கமுடியாதேன்று உண்டே சொல்லிவிடு
இந்த வேகம் உன்னுடனான காதலை சமாதிகட்டுவதற்காக இல்லை
எனக்கே சமாதிகட்டுவதற்காக, என் பிணம் மேலும் நாறுவதற்குள்..