Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Jan 26, 2011

அம்மா கவிதை - ஒன்று

நானும் அப்படியே


கருவறையின் காரிருளின் பயம் போக்க தன் வயிற்றினருகே கையை
வைத்திருந்து தைரியம் தந்தவளின் கைதான் முதலில் தொடவேண்டும்

உறுப்புகளெல்லாம் ஒட்டிய பின்பு உதைக்க ஆரம்பித்தவுடன் ஆனந்தக்
கண்ணீர் சிந்தியவளின் கண்களின் பார்வையில் முதலில் படவேண்டும்

புவியீர்ப்பு விசை மீறி தன் பேரன்பின்யீர்ப்பால் உந்தி நின்று என்
நிலைகாத்தவளின் வாய்மொழி தான் முதலில் என் செவியில் விழவேண்டும்

இப்படியெல்லாம் எண்ணித்தான் எல்லாக்குழந்தைகளும் பிறக்கின்றது
அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூட அழவில்லை ஆனால்

பெற்ற வலி தந்த மயக்கத்திலுறங்கும் தாய் தன்னைப் பெற்றதனால்
மரித்துவிட்டலோ என்றேண்ணித்தான் அழ ஆரம்பிக்கிறது...

நானும் அப்படியே!!