நான் பார்த்த இந்த உலகத்தின் என் பார்வையும்,அதில் நான் விரும்பும் மாற்றங்களும், அதற்கான தேடல்களும் இந்தப்பதிவுலகத்தில் பகிர்ந்துகொள்ளபோகிறேன்
Jul 1, 2012
Nov 11, 2011
பெண்ணும் புத்தகமும்
May 24, 2011
அவள்! அவள்!! அவள்!!!
வண்ணத்துப்பூச்சியா - மலரா
வண்ணத்துப்பூச்சிகளுக்கோ நீ அவை வந்தமர முடியாத மலர்!
மலர்களுகோ நீ அவை மிது வந்தமாரத வண்ணத்துப்பூச்சி!
நீ மலரா, வண்ணத்துப்பூச்சியா!
சில நேரங்களில் நான் உன்னைத்தேடி..
சில நேரங்களில் நீ என்னைத்தேடி..
படைப்பாளி
பிரம்மனின் படைப்புகளில் மதிப்பிருந்ததில்லை எனக்கு
பழுதுகள் பல நான் உட்பட..
அவன் வெளியிட்ட 5' 2 கவிதைத் தொகுப்பான உன்னைக் கண்டேன்
உன் பாதம் போதும் அவன் பதம் சொல்ல
இனி அவன் படைப்பில்
பழுதுகள் எனக்கும் இல்லை எவர்க்கும் இல்லை.
அழகு
அழகென்பது காட்சிகளில் இல்லை காண்பவனின் பார்வையில் தான்
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
கண்டவனின் பார்வையை அழகாக்கிய காட்சி நீ.
அழகென்பது இருப்பதில் இல்லை தெரிவதில் தான்
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
தெரிவதே இவ்வளவென்றால் இருப்பதில் ஆர்வம் கொண்டேன்.
Jan 26, 2011
அம்மா கவிதை - ஒன்று

கருவறையின் காரிருளின் பயம் போக்க தன் வயிற்றினருகே கையை
வைத்திருந்து தைரியம் தந்தவளின் கைதான் முதலில் தொடவேண்டும்
உறுப்புகளெல்லாம் ஒட்டிய பின்பு உதைக்க ஆரம்பித்தவுடன் ஆனந்தக்
கண்ணீர் சிந்தியவளின் கண்களின் பார்வையில் முதலில் படவேண்டும்
புவியீர்ப்பு விசை மீறி தன் பேரன்பின்யீர்ப்பால் உந்தி நின்று என்
நிலைகாத்தவளின் வாய்மொழி தான் முதலில் என் செவியில் விழவேண்டும்
இப்படியெல்லாம் எண்ணித்தான் எல்லாக்குழந்தைகளும் பிறக்கின்றது
அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூட அழவில்லை ஆனால்
பெற்ற வலி தந்த மயக்கத்திலுறங்கும் தாய் தன்னைப் பெற்றதனால்
மரித்துவிட்டலோ என்றேண்ணித்தான் அழ ஆரம்பிக்கிறது...
நானும் அப்படியே!!
காதல் பருவம் - இரண்டு
காமமெனும் சூரியகுடும்பத்தில்
நம் மெத்தையெனும் பூமியில்
நீ கிடந்திருப்பாய் நிலப்பரப்பைப் போல
நான் உன் மேல் மிதந்தேன் மேகத்தைப் போல
உன் கூந்தலெனும் காட்டுபகுதியாக
அதை வளைக்கும் என் கைகள் காற்றாக
என் உயிர் பொழியக்காத்திருக்கும் மழையாக
உன் அங்கமெல்லாம் அசைந்து கொடுக்கும் மரமாக
நம் உள்ளமெல்லாம் துள்ளும் மழைக்காக ஆடும் மயிலென
சிந்திய முத்தங்கள் மின்னலாக
அது எழுப்பிய சத்தம் இடியாக
நம் இருவரின் வியர்வை சாரலாக
என் உயிர் பாயிந்து உன்னில் மலரும் சிறு புல்லென
இவையனைத்தும் பார்த்த என் அறைவிளக்கு நிலவென
நானும் மெத்தையில் விழுந்துவிட்டேன் கடலோடு கலந்துவிட்டேன்
****************************************************************
அமாவாசை

நிலவைப் பார்த்துப் பார்த்து சோறுண்ணப்பழகிய குழந்தையோ அன்று அது வராதேனத் தெரியாமல்
நிமிடத்திற்கொருமுறை வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நானோ
நீ விடுப்பெனத் தெரிந்தும் உன் இருப்பிடத்தை நிமிடத்திற்கொருமுறை பார்த்துக்கொண்டிருப்பேன்
நிலவைப் பார்க்காமல் உண்ணாமல் கண்ணீருடன் அப்பிள்ளை உறங்கிய பின்
நிலவைக் காட்ட முடியாத சோகத்தில் அப்பிள்ளையின் தாய் கண்ணீர் சிந்துவாள்
உன்னைக் காணமல் கண்ணீர் சிந்திய என் கண்களுக்கு தைரியம் சொன்ன என் இதயம் அழத்தொடங்கியது அப்பிள்ளையின் தாய் போல
விழித்ததும் இதயம் சொன்னது இன்று நீ வருவாயென!!
Dec 25, 2010
கண்ணாடிப் பருவம் - ஒன்று
ஒன்று - கண்ணாடியில் தன்னை அழகாக்கிப் பார்க்க
இரண்டு - பார்த்த முகத்தை பெண் முன்னின்று காட்ட
முடாத வாய்மூடி பேசாத விழிகள் பேசத் தொடங்கும்
கண்போன பாதையில் சென்ற கால்கள் இப்போது
பெண்போன பாதையில் செல்ல ஆரம்பிகிறது
கதாநாயகனின் சண்டை காட்சிகளை மட்டும் பார்த்து ரசித்தவர்கள்
அவன் காதல் செய்வதையும் கவனித்து ரசிக்க ஆரம்பிக்கிறார்கள்
அவனின் காதலியை இவர்களும் காதலிக்கிறார்கள்
கனவிலும் செரி நினைவிலும் செரி பெண்களே நிறைகிறார்கள்
கண்ணெதிரே பார்த்த பெண்ணிடமோ கனவில் பேசுகிறார்கள்
கனவில் கண்ட பெண்ணையோ கடைத்தெருவில் தேடுகிறார்கள்
நிலவைப் பார்த்து சோறுண்டவர்கள் பின் நிலாவை
தேடித்தேடி பிடித்து ஒட்டுத்தால்வாரத்தில் அடைத்தவர்கள்
நிலாவுடனும் படுகிறார்கள் நிலவையும் பற்றியும் படுகிறார்கள்
காமத்தீயால் இளமை இதயத்தை எரிக்க எழுந்த வெப்பத்தை
காதலில் இளைப்பாற்ற காதலியைத் தேடியலைகிறார்கள்
சிலருக்குத்தான் தேடிய காதலி கிடைக்கிறார்கள்
தேடிக்கிடைக்காதவர்கள் கிடைத்தை காதலிக்கிறார்கள்
தேடல் என்றும் தொடரும்!!!
காதல் பருவம் - ஒன்று
புன்னகைக்கும் ஓவியம் கண்டதுண்டு!! ஒரு ஓவியம் புன்னகைப்பதைப் பார்க்கத்தான் அன்பே..
மல்லிகைச்சரம் வேண்டாம் உன் குந்தலுக்கு!! காசு கையில் இல்லாமல் சொல்லவில்லை..
மல்லிகையினால் உன் குந்தல் மணக்கவில்லை கானகாம்பரத்தில் கூட மல்லிகை வாசம் உன் குந்தலால்..
உன் வசமில்லாத காற்றை நுகர்க்கும் தருணங்களில் பிணமானேன்..
மேற்ச்சொன்ன எந்த ஊனத்தையும் நான் பொறுத்துக்கொள்கிறேன்..
உன்னை நான் என் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தால்..
ஆகையால் குருடனாக மட்டும் இருக்க முடியாது கண்ணே..
இந்தப்பேரழகியை எனக்குக்காட்டிய என் கண்களுக்கு தண்டனை தர முடியாது.
சமாதிகள்
ஒரு பொய்யிலாவது நான் உன் காதலனாக வேண்டுமென்று ஆசைப்படவில்லை
மெய்யை உரைத்து விடு என்னை உன் காதலனாக ஏற்கமுடியாதேன்று உண்டே சொல்லிவிடு
இந்த வேகம் உன்னுடனான காதலை சமாதிகட்டுவதற்காக இல்லை
எனக்கே சமாதிகட்டுவதற்காக, என் பிணம் மேலும் நாறுவதற்குள்..
Apr 4, 2010
குத்து - ஓன்று
கோவிலிலிருந்து வெளியே வந்தேன் பிச்சைக்காரன் "தர்மம் பண்ணுங்க சாமி" என்றான்,இறைவனிடம் உள்ளே பிச்சை கேட்ட என்னிடம்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் கைக்கெடிகாரம் பரிசு கொடுத்தார் அப்பா, படித்த நேரத்திற்கான பரிசில்லை அது வீணடித்த நேரத்தை உணர்த்தும் தண்டனை. பயனற்றுப்போன நேரத்திற்க்கெல்லாம் உழைத்திருக்கலாமென்று உறுத்திக்கொண்டேயிருந்தது. வீண்போன நேரத்தை தேடினேன், தேடிய நேரமும் வீணாகுமெனத் தெரியாமல். நேரத்தை துரத்த அசை ஆனால் தோற்க்கப் பிடிக்காததால் துறந்தேன். துரத்தாதே நேரமே கழற்றுகிறேன் கைக்கேடிகரத்தை உடனே பாரில் நிறையவுண்டு பார்க்க உன்னைப் பார்த்துப்பார்த்து பார்க்க முடியாமல்.
பூட்டிய செக்கு மாடுகள் வட்டமாக மட்டும் சுற்றுவதைப் போல வட்டமான கண்ணாடிப்பெட்டிக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த முட்கள். தொடங்கிய இடம் தெரியாமல் சேரவேண்டிய இடம் புரியாமலும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த முட்கள் சேர்வதர்க்காகத்தான் சுற்றியது போலிருக்கும் சேர்ந்த சில நொடியில் பிரிவதற்க்கான பாதையில் படுவேகமாகச் சுற்ற ஆரம்பிக்கும். சேர்வதற்கும் பிரிவதற்கும் ஒரே வேகம் தான். ஒருநாள் நிற்கத்தான் போகிறதென்று தெரியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது நின்ற பின்பும் துடிப்படங்காமல் தவித்துக் கொண்டேயிருக்கிறது.







