Dec 25, 2010

காதல் பருவம் - ஒன்று


உண்மை எது?
ஈர்க்கும் உன் புன்னகை போதும் கண்ணே!!, பொன்நகை விலையதிகமானத்தால் சொல்லவில்லை..
புன்னகைக்கும் ஓவியம் கண்டதுண்டு!! ஒரு ஓவியம் புன்னகைப்பதைப் பார்க்கத்தான் அன்பே..

மல்லிகைச்சரம் வேண்டாம் உன் குந்தலுக்கு!! காசு கையில் இல்லாமல் சொல்லவில்லை..
மல்லிகையினால் உன் குந்தல் மணக்கவில்லை கானகாம்பரத்தில் கூட மல்லிகை வாசம் உன் குந்தலால்..

ஊனம்

என் எண்ணங்களை உன்னிடம் கூறமுடியாத பொழுது உமையானேன்.. என் காதுகளில் உன்னுடைய வார்த்தைகள் விழாதபொழுது செவிடானேன்.. உன் பாதையில் நான் நடக்க முடியாத நாட்களெல்லாம் நான் முடவன்..
உன் வசமில்லாத காற்றை நுகர்க்கும் தருணங்களில் பிணமானேன்..

மேற்ச்சொன்ன எந்த ஊனத்தையும் நான் பொறுத்துக்கொள்கிறேன்..
உன்னை நான் என் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தால்..
ஆகையால் குருடனாக மட்டும் இருக்க முடியாது கண்ணே..
இந்தப்பேரழகியை எனக்குக்காட்டிய என் கண்களுக்கு தண்டனை தர முடியாது.

சமாதிகள்

ஒரு பொய்யிலாவது நான் உன் காதலனாக வேண்டுமென்று ஆசைப்படவில்லை
மெய்யை உரைத்து விடு என்னை உன் காதலனாக ஏற்கமுடியாதேன்று உண்டே சொல்லிவிடு
இந்த வேகம் உன்னுடனான காதலை சமாதிகட்டுவதற்காக இல்லை
எனக்கே சமாதிகட்டுவதற்காக, என் பிணம் மேலும் நாறுவதற்குள்..

1 comment: