Nov 22, 2011

Why This kolaveri di








yo boys i am singing song
soup song
flop song

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

rhythm correct

why this kolaveri kolaveri kolaveri di

maintain this

why this kolaveri..di


uniform sylabus change-U
200 crores loss-U
loss-u loss-u two months-U
How do I pass-U
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

Super-U your Hospital Plan-U
good-Library-Gone-U
More Books-U Clean Looks-u
Why you Plucks-U

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama Purse eduthuko
apdiye Kooda Kaas eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass
only english.. 

hand la glass
glass la scotch
scotch avail in elite-U

tea-u coffee-U
bad for health-U
so Milk Price Raise-U

Bus-U Bus_U
oh Govt Bus_U
Always runs loss-U
Now-U Now-U price raise-U
we use natraj service-u

god we r dying now-u
she say we happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song
 

Nov 21, 2011

ராக்ஸ்டார்



நான் திரையரங்கிற்குச் சென்று பார்த்த மிகச் சில ஹிந்திப் படங்களில் ஒன்றாகும்.ரஹ்மானின் இசை மட்டுமே பார்க்க தூண்டியதர்க்கான ஒரே காரணம். ரன்பீர்  மற்றும் இம்டியாஸ் அலியின் சென்ற வெற்றிகளின் தாக்கமும் இரண்டாவது காரணம்.
பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை கேட்டவுடனே அதை எப்படிபடமக்கிருப்பார்கள் என்ற அரவமும் மொஹித்தின் பாட்டுத்திறமையை ரன்பீர் எப்படி வெளிப்படுத்திருப்பார் என்ற பல கேள்விகளும் என்னை தூண்டின.

படத்தின் விமர்சனங்களும் சின்ன சின்னக் குறைகளை மட்டுமே சுட்டிகாட்டியிருந்தனர், சரி ஒரு முறை பார்க்கலாம் என்ற தைரியத்தை வரவழைத்து சென்றுவிட்டேன். 
கதை பெரிய வித்தியாசமான ஓன்றல்ல ஆனால் திரைக்கதையின் அமைப்பு எப்படியான ஒரு மாயையை செய்திருக்கிறது. அந்த மாயாஜாலத்திற்கு ரன்பிரின் நடிப்பு, ரஹ்மானின் இசை, நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் ஒரு ஸ்ருதியில் சங்கமிக்கிறது.

ரன்பீர் ஒரு மிகச் சாதாரணமான கல்லூரி மாணவனாக இருந்து ஒரு ராக்ஸ்டார் மாறும் மாற்றத்தையும் அழகாக செய்திருக்கிறார். வெகுளித்தனம், காதல், துடிப்பு, ஏமாற்றம், வலி, வேதனை என்று நிறைய பாவனைகள் உடனுக்குடன் செய்யவேண்டிய ஒரு கதாப்பாத்திரத்தை மிக்கும் அற்புதமாக செய்திருக்கிறார். ஷம்மி  கபூரின் பார்வைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப் பட்டிருகிறது. நர்கிஸ் கொடுத்த வேலையை நேர்த்தியாக காட்சிகளில் அழகை தூவி நம்மை கொள்ளைகொள்கிறார்.குமுட் மற்றும் பியுஷும் தங்களுடைய பத்திரங்களை பிரமதாமாக நடித்துள்ளனர்.



இசையின் ரசிகன் நான் இந்தப்படத்தின்  ஒவ்வொன்றும் பாடலும் அருமை என்று முன்னமே சொல்லிவிட்டேன் இன்னும் பல முறை சொல்லவேண்டும். சடா ஹாக், நாதான் பரிந்தே, கவாலி, ஷேகர் மீன் மட்டும் தான் பிடித்திருந்தது. படம் பார்த்தபின் தும் ஹூ, ஹவா ஹவா, ஆர் ஹோ, ஷெனாய் "fusion" என்று அனைத்துமே ஈர்த்தது.

இந்தப்படத்தில் தவறு சொல்ல ஒன்றும் என்னகுத் தெரியவில்லை என்ற போதும், தவறும் சரியும் இல்லா இடத்தில எனக்கும் இடம் கேட்கும் நான் தவறு சொல்ல முடியாது.
அந்த இடத்தைத் தேடுகிறேன்  ஜோர்டான் போல..

Nov 11, 2011

பெண்ணும் புத்தகமும்



பேருந்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்குண்டு 
தமிழ் பிடித்ததால் படிக்கிறேனா படித்ததால் தமிழ் பிடித்ததா தெரியவில்லை
பெண்களைப் பிடிக்கும் வயதில் புத்தகம் பிடித்ததும் படித்ததும் 
முரணான பழக்கங்கள் இல்லையென்பது படித்தவர்கள் வாக்கு.
(புத்தகத்தையும் பெண்ணையும் ஒருசேர )

பெண் பிடித்த பருவங்களில் நான் சந்தோசமாக சஞ்சரித்தாலும் 
பெண்களால் படிக்க முடியவனாகவே இருப்பது ஒரு சங்கடம் தான்
புத்தகம் படிப்பது பெண் பற்றிய நிறைய புரிதல் ஏற்படுத்தினாலும் 
அது என் பெண்ணின் ரசனையையும் அதிகப்படுத்திருக்கிறது 
கதைளில் காதல்களை தேடி வாசித்ததுண்டு இது வரை கிடைக்காதது 
யோசிக்கும் பொழுது மூடி யாசித்ததுமுண்டு 

இன்றும் புத்தகம் திறந்தேன் பேருந்தில் 
எதிரில் படிக்கக் காத்திருந்த பெண் ஒருத்தி 
எதை தொடங்க வண்ணதாசனின் கவிதைகளையா,
கருப்பு வெள்ளையில்  தெரியும் வனவில்லையா
இரண்டுமே என்னுள் எழும் உணர்சிகள் தான் எனினும் 
புத்தகத்தை எழிதாக முடிவிட முடிகிறது.
என் அகத்தினுள் பெண் இல்லாததுதான் போலும்.

தீட்டப்பட்ட புருவங்கள் வானமாய் இமைகள் சிறகடிக்க 
பறக்கும் விழிகளின் ஈரத்தின் சாரலில் நனையத்தொடங்கிய
சில நிமிடங்களில் அவளின் இறக்கம் வந்தது அனால் 
சற்றும் இரக்கம் வரவில்லை என் மிது
உறக்கம் பெரிதென்று மற்றவர்கள் கிடக்க
கிறக்கம் கொண்ட என்னைக் கண்டு கொள்ளத் தெரியவில்லை 

அந்த இறக்கத்தில் இறங்கியது அவள் ஒருத்தி இல்லை
என் இதயமும் இறங்கியதை எனக்கே இப்பொழுதுதான் தெரியவந்தது 
என்னை விட்டு பராரியை பாவைபின் சுற்றும் எனக்கவலை எனக்கில்லை 
பராரியின் சந்தோசம் கூட இல்லாமல் எனக்கு வாய்க்கவில்லை
இடப்பக்கம் இதயம் இல்லாத போதும் அதற்கு மேல் பயச்சீட்டும் சில்லறையுடன் நான்.......

May 24, 2011

அவள்! அவள்!! அவள்!!!



உன் மேகம் 
வானின் மேகங்களின் உருவ மாற்றம் பெரிய விசயமில்லை 
உன் நேற்றிச்சுருக்கங்களின் மாற்றமோ உன் 
 கண்களின் கதிர்களை

சந்திரனிலிருந்து சூரியனுக்கும் சூரியனிலிருந்து சந்திரனுக்கும் மாற்றிவிடுகிறது.

காதல் ஒரு மின்னல்
கச்சிதமாய் வரும் சந்திரனுமில்லை 
நிச்சியமாய் வரும் சூரியனுமில்லை 
உச்சியில் வரும் ஒற்றுமை அவ்வளவே!!

பேச்சு
சில ஆண்களுக்கு மட்டுமே சுற்றிலும் பெண்கள் பேச்சு
மற்றவர்களுக்கோ  பெண்களைச் சுற்றியே மட்டுமே பேச்சு


வண்ணத்துப்பூச்சியா - மலரா
வண்ணத்துப்பூச்சிகளுக்கோ நீ அவை வந்தமர முடியாத மலர்!
மலர்களுகோ நீ அவை மிது வந்தமாரத வண்ணத்துப்பூச்சி!
நீ மலரா, வண்ணத்துப்பூச்சியா!
சில நேரங்களில் நான் உன்னைத்தேடி..
சில நேரங்களில் நீ என்னைத்தேடி..


படைப்பாளி 
பிரம்மனின் படைப்புகளில் மதிப்பிருந்ததில்லை எனக்கு 
பழுதுகள் பல நான் உட்பட..
அவன் வெளியிட்ட 5' 2 கவிதைத் தொகுப்பான உன்னைக் கண்டேன் 
உன் பாதம் போதும் அவன் பதம் சொல்ல 
இனி அவன் படைப்பில் 
பழுதுகள் எனக்கும் இல்லை எவர்க்கும் இல்லை.


அழகு 
அழகென்பது காட்சிகளில் இல்லை காண்பவனின் பார்வையில் தான்
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
கண்டவனின் பார்வையை அழகாக்கிய காட்சி நீ.


அழகென்பது இருப்பதில் இல்லை தெரிவதில் தான் 
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
தெரிவதே இவ்வளவென்றால் இருப்பதில் ஆர்வம்  கொண்டேன்.

Jan 26, 2011

அம்மா கவிதை - ஒன்று

நானும் அப்படியே


கருவறையின் காரிருளின் பயம் போக்க தன் வயிற்றினருகே கையை
வைத்திருந்து தைரியம் தந்தவளின் கைதான் முதலில் தொடவேண்டும்

உறுப்புகளெல்லாம் ஒட்டிய பின்பு உதைக்க ஆரம்பித்தவுடன் ஆனந்தக்
கண்ணீர் சிந்தியவளின் கண்களின் பார்வையில் முதலில் படவேண்டும்

புவியீர்ப்பு விசை மீறி தன் பேரன்பின்யீர்ப்பால் உந்தி நின்று என்
நிலைகாத்தவளின் வாய்மொழி தான் முதலில் என் செவியில் விழவேண்டும்

இப்படியெல்லாம் எண்ணித்தான் எல்லாக்குழந்தைகளும் பிறக்கின்றது
அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூட அழவில்லை ஆனால்

பெற்ற வலி தந்த மயக்கத்திலுறங்கும் தாய் தன்னைப் பெற்றதனால்
மரித்துவிட்டலோ என்றேண்ணித்தான் அழ ஆரம்பிக்கிறது...

நானும் அப்படியே!!

காதல் பருவம் - இரண்டு

காதல் பிரபஞ்சம்

காதலெனும் பால்வெளியில்
காமமெனும் சூரியகுடும்பத்தில்
நம் மெத்தையெனும் பூமியில்
நீ கிடந்திருப்பாய் நிலப்பரப்பைப் போல
நான் உன் மேல் மிதந்தேன் மேகத்தைப் போல
உன் கூந்தலெனும் காட்டுபகுதியாக
அதை வளைக்கும் என் கைகள் காற்றாக
என் உயிர் பொழியக்காத்திருக்கும் மழையாக
உன் அங்கமெல்லாம் அசைந்து கொடுக்கும் மரமாக
நம் உள்ளமெல்லாம் துள்ளும் மழைக்காக ஆடும் மயிலென
சிந்திய முத்தங்கள் மின்னலாக
அது எழுப்பிய சத்தம் இடியாக
நம் இருவரின் வியர்வை சாரலாக
என் உயிர் பாயிந்து உன்னில் மலரும் சிறு புல்லென
இவையனைத்தும் பார்த்த என் அறைவிளக்கு நிலவென
நானும் மெத்தையில் விழுந்துவிட்டேன் கடலோடு கலந்துவிட்டேன்

****************************************************************
அமாவாசை

கதிரொளியை பரதிபலிக்க முடியாத நிலவின் ஒளியின்றி நிர்மூலமாய் நிற்கும் வானம் அது போல நீ வராத நாளன்று தன் களையை இழந்திருக்கும் நம் அலுவலகமும்

நிலவைப் பார்த்துப் பார்த்து சோறுண்ணப்பழகிய குழந்தையோ அன்று அது வராதேனத் தெரியாமல்

நிமிடத்திற்கொருமுறை வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நானோ

நீ விடுப்பெனத் தெரிந்தும் உன் இருப்பிடத்தை நிமிடத்திற்கொருமுறை பார்த்துக்கொண்டிருப்பேன்

நிலவைப் பார்க்காமல் உண்ணாமல் கண்ணீருடன் அப்பிள்ளை உறங்கிய பின்

நிலவைக் காட்ட முடியாத சோகத்தில் அப்பிள்ளையின் தாய் கண்ணீர் சிந்துவாள்

உன்னைக் காணமல் கண்ணீர் சிந்திய என் கண்களுக்கு தைரியம் சொன்ன என் இதயம் அழத்தொடங்கியது அப்பிள்ளையின் தாய் போல


விழித்ததும் இதயம் சொன்னது இன்று நீ வருவாயென!!